×

பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு ரயில் சேவை : ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை

பழநி :பழநியில்  ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. சங்க தலைவர்  முருகானந்தம் தலைமை வகிக்க, செயலாளர் பச்சமுத்து வரவேற்றார். கவுரவ தலைவர்  ஹரிஹரமுத்து, கவுரவ செயலாளர் பெருமாள்நாதன் முன்னிலை வகித்தனர். விழாவில்  கிணத்துக்கடவு- பொள்ளாச்சி ரயில் நிலையங்களை மீண்டும் மதுரை கோட்டத்துடன்  இணைக்க வேண்டும். பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை மீண்டும்  செயல்படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம்- பொள்ளாச்சி- திண்டுக்கல்- திருச்சி  வழித்தடத்தில் சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும்.  மேட்டுப்பாளையம்- பொள்ளாச்சி- திருச்சி- தஞ்சாவூர்- தாம்பரம் வழியாக இரவு  நேர ரயில் இயக்க வேண்டும். மேட்டுப்பானையம்- பழநி வழித்தடத்தில்  ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம்- பழநி- ராமேஸ்வரம்  ரயில் இயக்க வேண்டும். கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில் சாதாரண ரயில்  இயக்க வேண்டும். பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும்.  புதுதாராபுரம் சாலையில் ரயில் தடத்தை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

The post பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு ரயில் சேவை : ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Palani ,Rail Users Association ,President ,Muruganantham ,Pachamuthu ,Dinakaran ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...